தினம் ஒரு மூலிகை – கரிசாலங்கண்ணி
கரிசாலை என்று அழைக்கும் கரிசலாங்கண்ணி , நம்மருகே நீர்நிலைகளிலும், சாலை ஓரங்களிலும், நிலங்களிம் இருக்கும் ஒரு பாரம்பரிய மிக்க ஒரு கற்பமூலிகை ( உடலை பலப்படுத்தும் மூலிகை) எதிரடுக்கில் அமைந்த வெள்ளை நிற மலர்கள் உடைய மிக்குறுஞ்செடியினம். தரையோடு படர்ந்தும் வளர்வதுண்டு. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஈரமான நிலத்தில் தானே வளர்வது.
பயன்கள்
கல்லீரல், மண்ணீரரை பலப்படுத்துவதுடன் செயல்பாட்டினையும் ஒழுங்குப்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோயை குணமாக்குகிறது. மதுப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பினை குணப்படுத்துகிறது. அதிக காய்ச்சலினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு, மண்ணீரல் வீக்கத்தினையும் சரி செய்கிறது
இரத்த சோகை
கரிசாலையில் அதிகமான இரும்புச்சத்து உள்ளதால் இரத்தத்தினை சுத்தப்படுத்தி செயல்பாட்டினை சீர்படுத்துகிறது அனிமியா என்று இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
வயிறு
குடல் புண், பித்தப்பை கற்கள், குடல் புழுக்கள், பித்தப்பை வீக்கம், மலச்சிக்கல் , வயிற்றுப்புண் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் கரிசலாங்கண்ணியால் குணமாகும்.
சளி இருமல்
சளி இருமல் உள்ளவர்களுக்கு கரிசாலையை உண்ணக்கொடுப்பதன் மூலம் ஆஸ்துமா, சளி, இருமல் போன்றவை குணமடைகிறது. அதிக காய்ச்சல் உள்ளவர்களுக்கு கரிசாலை சாற்றைக்கொடுத்தால் காய்ச்சல் குணமாகும், நோய் எதிர்ப்புத்திறனும் கிடைக்கும். புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும் உடலில் உள்ள தாதுக்கள் பலப்படுத்துவதற்கும் கரிசாலங்கண்ணி உதவும்
கண்
கண் பார்வை தெளிவாகவும், கண்ணொளி பெருகவும் உதவும்.
தோல்
கரிசாலை சாற்றை இதர மூலிகைகளுடன் மேற்பூச்சாக பயன்படுத்தினால் தோல் நோய்கள், அறிப்பு, தோல் வெடிப்பு நீங்கும்.
முடிவளர
எள் நெய் அல்லது தேங்காய் எண்ணெயில் இதன் இலையை அரைத்துப் போட்டு சூரியஒளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.
வேறுபெயா்கள்
கரிசாலை, கையாந்தகரை, கரிகா, கைகேசி, வைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான், பொற்றலைக்கரிப்பான், பொற்கொடி என பலப் பெயா்கள் உண்டு.
தாவரப்பெயா்
Eclipta prostrata Roxb இது Asteraceae என்ற தாவரக்குடும்பத்தைச் சாா்ந்தது.