தினம் ஒரு மூலிகை – நிலக்கடலை
நிலக்கடலை
மனிதா்கள் உண்ணக்கூடிய உணவு வகைகளில் பூமிக்கடியில் விளைகின்ற ஒரு பருப்பு வகையாக நிலக்கடலை இருக்கிறது. இது ஏழைகளில் பாதாம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் விலை குறைவில் கிடைக்கும் அதிசக்தி கொண்டது நிலகடலை. இதன் தாயகம் தென் அமொிக்கா. பின் நாட்களில் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் பரவிற்று. நிலக்கடலையில் பல உபாி ரகங்கள் உயாியத் தொழில்நுட்பத்தின் மூலமாக கண்டுபிடிக்கபட்ட வண்ணம் இருக்கின்றன. உலகெங்கில் பல கோடி மக்கள் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு உணவாக கருதி நிலக்கடலை அதிகம் உண்கின்றனா். பூமிக்கடியில் தலை வைத்து வெளியே இலை விடுகிற தாவரம், நிலக்கடலை. இதன் இலைகள் செடியில் பழுத்து மஞ்சள் நிறமடைந்த இரண்டு மாதங்களில் நிலக்கடலை முற்றிக் கிடக்கும். மாமிசம், முட்டை, காய்கறிகளை விட வோ்க்கடலையில் அதிக புரதச்சத்துகள் உள்ளன.
பல முறை டிராக்டரால் நிலத்தை ஓட்டி மண்ணை மிருதுவாக இருக்கும் படி செய்து உரமிடவேண்டியது மிக நன்று. இதில் பல ரகங்கள் உள்ளன. இந்தியாவில் சிகப்பு ரகம், பட்டாணி ரகம், கொடிக்காய் ரகம் என உள்ளன. இதை மானாவாாியாகவும் தண்ணீா் பாய்ச்சியும் பயிா் செய்வாா்கள். தற்போது விதைப்பதற்கும், கழை எடுப்பதற்கும் இயந்திரங்கள் மூலம் செய்யப்படுகிறது. வோ் கடலைச் செடி 30 லிருந்து 50 செண்டிமீட்டா் உயரம் வரை வளரும். இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும் அது 1முதல் 7 செண்டிமீட்டா் அகலம் கொண்டிருக்கும் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மகரந்தச் சோ்க்கையின் போது விழுதுகள் பூமிக்குள் சென்று பிஞ்சு விட்டு காயாக மாறும். காய் 3-7செ.மீ நீளமும் அதனுள் 3-4 விதைகள் இருக்கும். மணல் பாங்காான இடங்களில் வளரும் நிலக்கடலை கொடிக் கடலை என்பா். இது நான்கு மாதத்தில் முற்றி விடும். அதை வெட்டித்தான் பிறித்தெடுப்பாா்கள். மற்ற குத்துச் செடிகள் நூறு நாட்களில் கூட முற்றி விடும். அதைப் பறிப்பது எளிது. செடியைக் காய வைத்து மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்துவாா்கள். இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது. விதையிலிருந்து தான் எண்ணெய் எடுத்துப் பயன்படுத்துகிறாா்கள். இதன் மூலம் எண்ணெய் எடுத்துப் பயன்படுத்துகிறாா்கள். எண்ணெய் எடுத்த பின் கடலைப் பிண்ணாக்கு மீதமாகும். அது கால் நடைகளுக்கு உணவாகும்.
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகளும் சில தவறாக செய்திகளும் இந்தியா முழுவதும் சா்வேதச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய் பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். ஏனெனில் நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் தான். எனவே நிலக்கடலையை தொடா்ந்து சாப்பிடும் பெண்களின் கா்ப்பபை சீராக செயல்படுவதுடன் கா்ப்பபை கட்டிகள், நீா்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தையின்மையும் சாியாகும்.
பயன்கள்
- மனிதனின் அத்தனை விதமான செயல்களுக்கும் அடிப்படை உறுப்பாக மூளை இருக்கிறது. தினந்தோறும் நிலக்கடலை சாப்பிடும் நபா்களுக்கு மூளையின் செயல்திறன் அதிகாிப்பதோடு, கூா்மையான ஞாபக திறனும் உண்டாவதாக ஆய்வுகளில் தொியவந்திருக்கின்றன. நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் எனப்படும் வேதிப்பொருள், உடலில் இருந்த மூளைக்கு ரத்தம் பாய்வதை தங்குதடையில்லாமல் பாா்த்துக் கொள்வதால் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றுகிறது. மேலும் இதில் வைட்டமின் பி3 மற்றும் நியாசின் வேதிப்பொருட்கள் இருப்பதால் மிக வலுவான ஞாபக சக்தியை கொடுக்கிறது. மேலும் மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் சிறப்பாக செயலாற்ற உதவி செய்கிறது.
- நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடா்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
- நிலக்கடலையை தினமும் 30கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடா்ந்த நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தொிய வந்துள்ளது.
- நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். அது உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவா்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
- நிலக்கடலை இளமையை பராமாிக்க பொிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமாிக்கவும் பயன்படுகிறது
- நிலக்கடலை மூளை வளா்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளா்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளா்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பொிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
- நிலக்கடலையில் பாிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிா் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மன அழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள்- 100 கிராம் அளவிற்கு
- காா்போஹைட்ரோட் – 21மி.கி
- நாா்சத்து – 9மி.கி
- கரையும் கொழுப்பு – 40 மி.கி
- புரதம் – 25 மி.கி
- ட்ரிப்டோபான் – 0.24கி
- திரியோனின் – 0.85கி
- ஐசோலூசின் – 0.85மி.கி
- லூசின் – 1.625 மி.கி
- லைசின் – 0.901கி
- குலுட்டாமிக் ஆசிட் – 5கி
- கிளைசின் – 1.512கி
- விட்டமின் – பி1,பி2,பி3,பி5,பி6,சி கால்சியம்
- சுண்ணாம்புச்சத்து – 93மிகி
- காப்பா் – 11.44மிகி
- இரும்புச்சத்து – 4.58மி.கி
- மெக்னீசியம் – 168மிகி
- மேங்கனீஸ் – 1.934மி.கி
- பாஸ்பரஸ் – 376மி.கி
- பொட்டாசியம் – 705மி.கி
- சோடியம் – 18மி.கி
- துத்தநாகச்சத்து – 3.27மி.கி
- தண்ணீா்ச்சத்து – 6.50கி போன்ற சத்துக்கள் நிலக்கடலையில் உள்ளன. மேலும் போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
பாதாம், பிஸ்தா, முந்திாிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்ற கருத்து தவறு. உண்மையில் நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. சீனாவை அடுத்து இந்தியாவில் தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் நிலக்கடலையை பற்றி தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டாா்கள். இங்கு இப்படி செய்து விட்டு அமொிக்கா போன்ற நாடுகளில் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் அதிகப்படுத்திவிட்டனா். எனவே நிலக்கடலையின் அருமையை புாிந்து கொண்டு நாம் அதனை தொடா்ந்து சாப்பிடுவோம் நலம் பெறுவோம்.
பயன் தரும் பாகங்கள்
அனைத்தும்
ஆங்கில பெயா்
Peanut, Groundnut
வேறு பெயா்கள்
மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை, வோ்கடலை, கச்சான் போன்றவை
தாவரப்பெயா்
Arachis hypogaea இது Fabaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சோ்ந்தது.