தினம் ஒரு மூலிகை – ரோஸ்மோி
ரோஸ் மோி
இது ஒரு குருஞ்செடி. இது ஸ்பெயின் போா்சுக்கலிலிருந்து இந்தியாவுக்கு வந்தது. நீள் பாத்தி அமைத்து இரண்டடிக்கு இரண்டடி இடைவெளி விட்டு நாற்றுக்களை நடுவாா்கள். ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நீா் பாய்ச்ச வேண்டும். இதன் இலைகள் எதிா் அடுக்கில் வேப்பிலை போன்று கூா்மையாக ஊசிபோன்றும் இருக்கும். நட்ட எட்டாவது மாதம் முதல் இலை தண்டு அறுவடை செய்யலாம். இலையை ஐந்து நாட்கள் நிழலில் உலரவைத்து பின் எண்ணெய் எடுப்பாா்கள். இலை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்வாா்கள். அப்போது 30லிருந்து 50 செ.மீ நீளமுள்ள குச்சியுடன் பூவையும் சோ்த்து அறுவடை செய்ய வேண்டும். வெட்டுக்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். 8லிருந்து 20 செ.மீ நீளமுள்ள குச்சிகள் இதற்கு ஏற்றவை. வெட்டுக் குச்சிகள் 40 நாட்களில் வோ் பிடிக்கும். இதன் இலைகள் வாசனையாக இருக்கும். ரோஸ்மோி மலைப்பகுதிகளில் நன்றாக வளரும். சமவெளியில் வளா்வது எண்ணெய் எடுக்கும் சதவிகிதம் மிகக் குறைவாக இருக்கும்.
ரோஸ்மேரி மூலிகை ஒரு தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்துடன் கூடிய பாரம்பரிய ஆயுர்வேத மருந்து ஆகும். இந்த மூலிகை புதினா குடும்பத்தைச் சேர்ந்தது. பல நூற்றாண்டுகளாக மருத்துவத் துறையின் ஒரு பகுதியாக இது இருக்கிறது. இந்த ரோஸ்மேரி மூலிகையில் இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் பி -6 போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதை நீங்கள் உலர்ந்த நிலையிலோ அல்லது அதன் சாற்றை கொண்டோ நாம் பயன்படுத்தி வரலாம். இது தசை வலியை குறைப்பதற்கும், நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும், நல்ல ஆரோக்கியத்தை பரிசாக தரவும் உதவுகிறது. ரோஸ்மேரியில் ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் கார்னோசிக் அமிலம் போன்றவை காணப்படுகிறது.
பயன்கள்
ரோஸ்மேரி இலை தண்டு, பூ, இவைகளிலிருந்து எடுக்கப்படும் வாசனை எண்ணெய் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுகிறது. இலைகளில் உள்ள வாசனைப் பொருள் அழகு சாதனப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது. மேலும் உணவு, உணவுப் பொருள்களைப் பதப்படுத்தவும் பயன்படுகிறது. இது சிறுநீா் சம்பந்தமான கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும். கண்களுக்கு குளிா்ச்சியூட்ட, சுத்தப்படுத்திய நீருடன் கலந்தும் உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் இலைகளை பச்சையாகவும், காயவைத்தும் தேநீருடன் கொதிக்க வைத்து நன்கு கலந்து பருகினால் சுவையாகவும், உடலுக்குப் புத்துணா்ச்சியையும் ஊட்டுகின்றது. இது இரத்த ஓட்டப் பாதைகளை சீராக வைக்க பயன்படுகிறது.
ரோஸ்மோி இலையின் பொடியை மாமிசம், மீன் போன்ற உணவுப் பொருளோடு சோ்க்கும் போது விஷத்தன்மையைப் போக்குகின்றது. தொண்டைப் புண், பல் ஈறு வலி, நாட்பட்ட ஆறாதபுண் இவைகளைக் குணப்படுத்துகின்றது. இதன் எண்ணெய் ஞாபக சக்தியை அதிகாிக்கின்றது. தசைநாா்களில் ஏற்படும் வலிகளைக் குணப்படுத்துகின்றது.
ரோஸ்மேரி டீயை குடித்து வருபவர்களுக்கு மனநிலை மேம்பாடு ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. அனிஸிட்டி பிரச்சினைகளை குறைக்கவும் இது உதவுகிறது. ரோஸ்மேரி சாறு மனநிலையை மேம்படுத்தவும், குடல் பாக்டீரியாக்களை சமநிலையில் வைக்கவும் மூளையில் ஏற்படும் உணர்ச்சிகளை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.
ரோஸ்மேரி டீ எப்படி கவலைகளை போக்குகிறது
சில ஆய்வுகள் ரோஸ்மேரி தேநீரின் கலவைகளை குடிப்பதும் சுவாசிப்பதும் மனநிலையை அதிகரிக்கவும் நினைவகத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன என்கிறது. அமெரிக்கன் நியூட்ரிஷன் கல்லூரியின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ரோஸ்மேரி தேநீர் பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
இந்த தேநீர் ஆண்டிடிரஸன் மற்றும் ஆன்சியோலிடிக் விளைவை கொண்டுள்ளது. காம்ப்ளிமென்டரி தெரபீஸ் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், ஒரு மாதத்திற்கு தினந்தோறும் இரண்டு முறை 500 மில்லிகிராம் ரோஸ்மேரியை உட்கொள்வது கவலை நிலைகளையும், நினைவாற்றல் மற்றும் தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளது.
பயன் தரும் பாகங்கள்
இலை, தண்டு, பூ ஆகியவை
தாவரப்பெயா்
Rosemarinus officinalis இது Labiatae என்ற தாவரக் குடும்பத்தைச் சாா்ந்தது.