தினம் ஒரு மூலிகை – கல்லுருவி
கல்லுருவி (Kalluruvi)
வளரியல்பு :-
கல்லுருவி நல்ல சீதோசன நிலையில் எல்லா இடங்களிலும் வளர்வது. இது சாதாரணமாக இந்தியா முழுவதும் சதுப்பு நிலங்களிலும் வளரும் ஒரு பூண்டு வகையைச் சோ்ந்தது. வயல்களில் நெல் அறுவடைக்குப்பின் கழையாகத் தென்படும் செடி.
இதன் தாயகம் இந்தியா. பின் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், பாக்கீஸ்தான், சைனா, பிலிப்பனஸ் , நியுஜினியா, ஆஸ்திரேலியா, மற்றும் மலேசியாவில் பரவிற்று.
கல்லுருவி ஒரு அடியிலிருந்து 2 அடி வரை வளரக்கூடியது. நேராக வளரும். சிறு கிழைகள் அதிகமாக இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் மென்மையானவை, நீளம் சுமார் 3.5 செ.மீ. இருக்கும். தண்டு சதுர வடிவில் அமைந்திருக்கும். இலை இடுக்குகளில் பூக்கள் பூத்திருக்கும். அதன் இதழ்கள் சுமார் 1.2 மி.மீ. நீளம் பச்சை அல்லது கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். சூலகம் வட்ட வடிவில் இருக்கும்.
இதன் இலை சாறு நமது தோலில் பட்டால் உடனடியாக வெந்துவிடும். இதன் சாற்றை பிழிந்து நீரில் விட்டால் நீரில் சிறிது நீராவி வரும். எனவே இதற்கு நீர் மேல் நெருப்பு என்று மற்றொரு பெயா் உள்ளது.
இது தன் மகரந்தச் சேர்க்கையால் காய் உண்டாகும். விதைகள் கருப்பாக இருக்கும். கல்லுருவி இனம் போன்று தொடர்புடைய
வேறு செடிகளின் பெயர்கள்-
AMMANNIA BACCIFERA L.FORMA BACCIFERA, AMMANNIA BACCIFERA KOEHNE FORMA TYPICA, AND AMMANNIA BACCIFERA L.SUBSP. BACCIFERA. இது போன்று எண்ணற்ற இனங்கள் உள்ளன. கல்லுருவி விதைகள் மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.
மருத்துவப்பயன்கள் :–
கல்லுருவி இலைகள் புண்களைப் போக்க வல்லது. விடத்தைக் குணப்படுத்தும். காய்ச்சலைப் போக்கும். புற்றுநோயால் அழியும் செல்களைப் புதிப்பிற்கும் தன்மையுடையது. மேலும் இது பற்றி பல ஆராய்ச்சிகள் மேல் நாட்டில் செய்து கொண்டுள்ளார்கள். இதன் மூலிகை இனம் காண்பதில் சில சிக்கல்கள் உள்ளதாகச் சொல்வர்.
‘கல்லுருவிப் பூண்டு பலகட்டிகளையுங் கரைக்கும்
வல்லுதிரக் கட்டருக்கும் வந்தபுண்ணை வெல்லரிய
மேகத் தைவல் விடத்தை நீறாத கற்றிடும்
லோகத்தைச் சுத்தி செய்யும் போது’
கல்லுருவி மூலிகை இலையை அரைத்து தோலில் தடவ கொப்பளிக்கும் கட்டி உடையும். கடி நஞ்சுகளுக்கு இதன் இலையைக் கசக்கி கடிவாயில் வைத்துக் கட்ட நஞ்சு முறியும். தேள் கடி விடத்தையும் முறிக்கும். இரத்தத் துடிப்பகற்றும்.
இலைச்சாற்றை வண்டு கடிக்குப் பூசினால் குணமடையும். இதன் இலைகளில் வைட்டமின் ‘சி’ உள்ளது.
இதன் இலைச்சாற்றை உடல் மீது தடவினால் தோல் வியாதி குணமடையும். காய்ச்சலும் குணமடையும்.
ரணமான புண்களைக் குணப்படுத்த இதன் சமூலத்தை அரைத்து வைத்துக் கட்ட குணமடையும்.
இதன் இலைகளை எரித்து சாம்பலாக்கி, அந்த சாம்பலுடன் கால்பங்கு பொரித்த வெங்காரப் பொடி அல்லது போரிக் ஆசிட் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து நகச் சொத்தையுள்ள இடங்களில் தொடா்ந்து தடவி வர நகச் சொத்தை மறைய ஆரம்பிக்கும். ஒவ்வாமை மற்றும் பலவித தோல் நோய்களால் தோன்றும் நக சீர்குலைவை சீர்செய்யும் அற்புத மூலிகை இந்த கல்லுருவி.
ஆங்கிலப் பெயா் – MONARCH RED STEM.
வேறு பெயா் – நீர்மேல் நெருப்பு
பயன் தரும் பாகங்கள்– சமூலம்
தாவரப்பெயர் :- AMMANNIA BACCIFERA.
தாவரக்குடும்பம் :- LYTHRACEAE.