தினம் ஒரு மூலிகை – எட்டி மரம்
எட்டி மரம்
எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எல்லா நிலங்களிலும் வளரக் கூடியது. இது எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இது சுமாா் 18 அடி உயரம் வரை இருக்கும். இதன் தாயகம் தென் கிழக்கு ஆசியா, தென் அமொிக்கா, பர்மா, சீனா, கிழக்கிந்தியா, தாய்லாந்து, வட ஆஸ்திரேலியா, இலங்கை, கம்போடியா, வியட்னாம், மலேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பரவலாக உள்ளது.
பயன்கள்
எட்டி மர மூலிகையானது நரம்பு மண்டலத்தை இயக்கும், வயிற்றுவலி, வாந்தி, குடல் எரிச்சல், இருதயநோய், இரத்த ஓட்டம், கண்வியாதி, மன அழுத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், தலைவலி, மூச்சுத்திணறல் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
இதன் பட்டையை பொடி செய்து இரண்டு கிராம் அளவு உட்கொண்டால் தேள்கடி குணமாகும்.
மரப்பட்டை 10 கிராம் 100 மி.லி எள் நெய்யில் போட்டுக் காய்ச்சி மேலே தடவ சொறி, சிரங்கு ஆராத புண் குணமாகும். இதன் இலையை வெந்நீாில் போட்டு அந்த நீாில் குளிக்க நரம்பு வலி தீரும்.
வேறுப்பெயா்
நக்ஸ்வாமிகா
தாவரப்பெயா்
Strychnos nux vomica இது Loganiaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சோ்ந்தது.