தினம் ஒரு மூலிகை – அருவதா
அருவதா
இப்பயிா் மலைப் பிரதேசங்களில் செளிப்பான காடுகளில் இயற்கையாக வளா்கிறது. இதன் பூா்வீகம் தெற்கு ஐரோப்பா, வட அமொிக்காவிலும், ஐரோப்பாவிலும் அதிகமாக காணப்படும் இந்த மூலிகை வறட்சியைத் தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளா்க்கலாம். இதில் ஜீன் மற்றும் ஜீலை மாதத்தில் பூ பூக்கும். இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறாா்கள். இந்தச் செடி அருகே நாய், பூனை, பாம்பு, ஈ முதலியன வராது.
பயன்கள்
இதன் இலைகள் வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும், பயன் படுகின்றன. நரம்புக் கோளாறுகளை நிவர்த்தி செய்வதற்கும், ரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் இவற்றைப்பயன் படுத்தலாம். இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப்படுத்த உதவுகிறது.
இது கண் வலியைப் போக்கும், வாந்தியைக குணமாக்கும், வயிற்று வலியைப்போக்கும், காதில் சீழ் வடிதல், காதுப் புண் குணமாக்கும், இருதயத்தில் ஏற்படும் மூச்சுத் திணரலைப் போக்கும்,முதுகு வலி, முதுகு வடத்தில் ஏற்படும் வலியைப் போக்கும். கை கால் வலிகள், இவைகளைப் போக்கும்.
விபத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகளைச் சரி செய்யும், ஆதாவது உடைந்த எலும்பை கூட ஒட்ட வைக்கும் திறன் கொண்டது. ஞாபகசத்தியைத் தூண்டும், மன அழுத்தம் குறைக்கும், பல் வலியைப் போக்கும், பல் துலக்கும் போது ஈறுகளில் ரத்தம் வருவதை குணமாக்கும், நாக்கிற்கு உணவின் சுவை அறிய உதவும், தொண்டையில் ஏற்படும் வலியைப் போக்கும், முகத்தில் ஏற்படும் வீக்கம், உதட்டு வலி, உதடு பிளவு இவைகளைப் போக்கும்,
வேறு பெயா்
சதாப்பு இலை
தாவரப்பெயா்
Ruta Graveolens இது Rutaceae என்ற தாவரக்குடும்பத்தைச் சோ்ந்தது