தினம் ஒரு மூலிகை – அக்கரகாரம்
அக்கரகாரம்
அக்கரகாரம் என்னும் மூலிகைச் செடி கருமண்கலந்த பொறைமண்ணில் நன்கு வளரும். இதன் அமிலத்தன்மை கொண்டது. வட ஆப்பிாிக்க தோன்றிய இது ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப் பட்ட மூலிகையாகும். தமிழ்நாட்டில் 1000 முதல் 1500 அடி வரை உயரம் உள்ள மலைப் பிரதேசங்களில் பயிாிடலாம். இந்த மூலிகை இந்திய மருத்துவத்தில் அதிக மதிப்பு உடையது. இலைகள் 15செ.மீ. நீளமானதாகவும் ஆரம்பத்தில் இளம்பச்சை நிறமாகவும், முதிர்வடையும் பருவத்தில் லேசான ஊதா நிறத்திற்கம் மாறிவிடும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்புப் புள்ளிகளுடன் காணப்படும்.
ஜொ்மனி, எகிப்து, கனடா நாடுகளில் பயிா் செய்யப்படுகிறது. இந்தியாவில் காஷ்மீா், இமாசலம் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் பயிா் செய்யப்படுகிறது. இதன் வோ்களில் அனாசைக்ளின்பெல்லிட்டோாின், எனிட் ரைன் ஆல்கஹால், ஹைடிரோகரோலின், இன்யூலின், ஆவியாகும் தன்மை உள்ள எண்ணெய் ஆகியவை வேரில் உள்ளன. இதில் இருந்து பெல்லிட்டோாின் அல்லது பைாித்திரின் எண்ணெய் எடுக்கப்படுகிறது.
பயன்கள்
சிறிது அக்கரகாரத்தை அரைத்து, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இது கால் லிட்டர் அளவு ஆனவுடன், அதை எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும். தினமும் அதில் சிறிதளவு வாயில் போட்டு அதக்கிக் கொண்டு, சிறிது நேரம் கழித்து கொப்பளிக்கவும். இதுபோன்று, தினமும் இரண்டு முறைகள் வீதம், மூன்று நாட்கள் கொப்பளித்து வந்தால் வாய் புண், தொண்டைப் புண், பல் வலி போன்ற பாதிப்புகள் விலகும்.
மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்
உடலின் சீரான இயக்கத்துக்கும், மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளையானது சரியாக இயங்காவிட்டால், சரியாக சிந்திக்க முடியாது, ஞாபக மறதி அதிகரிக்கும், மேலும் உடலில் சோர்வு உண்டாகும். இதற்கு அக்கரகார வல்லாரை மருந்து உதவி புரியும். அக்கரகாரம், வல்லாரை மற்றும் பூனைகாலி இவை மூன்றையும் சமமாக கலந்து தினமும், இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், மூளையின் செயல்பாடு சீராகும். மேலும் உடலின் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து, சிந்திக்கும் திறனை மேம்படும்.
நரம்பு தளர்ச்சியை போக்கும்
அக்காரகாரம், குங்குமப்பூ, ஜாதிக்காய், சந்தனம், கிராம்பு, சுக்கு, திப்பிலி சேர்த்து, நன்கு இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த சூரணத்தில் சிறிதளவு எடுத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று சம்பந்தமான வியாதிகள் மற்றும் நரம்புத் தளர்ச்சி பாதிப்புகள் நீங்கி உடல் பலமாகும்.
உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்
அக்கரகாரம் சாப்பிட்டு வந்தால் உடலின் மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, கெட்ட செல்கள் வெளியேறி, புதிய செல்கள் உருவாகும். இதன் மூலம், உடலின் வனப்பும், பொலிவும் அதிகரித்து, மனதில் உற்சாகம் தோன்றும், நாம் செய்யும் செயல்களில் ஈடுபாடு ஏற்படும்.
வேறுபெயா்கள்
அக்காா்கரா, ஸ்பானிஷ்பெல்லிடோாி, அக்கரம்
தாவரப்பெயா்
Anacyclus Pyrethrum இது Compositae என்ற தாவரக்குடும்பத்தைச் சாா்ந்தது.