தினம் ஒரு மூலிகை – கண்வலிக்கிழங்கு
கண்வலிக்கிழங்கு
இந்த மூலிகையின் பிறப்பிடம் இந்தியா ஆகும். மற்ற நாடுகளான ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தோசீனா, மடகாஸ்கர், இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வளர்ந்து வருகின்றது. மருத்துவப்பயன் கருதி வியாபார நோக்குடன் இந்தியாவில் சுமார் 2000 ஹெக்டரில் சாகுபடியாகிறது. தமிழ்நாட்டில் சேலம், கரூா், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் தற்சமயம் பரவலாகப் பயிரிடுகின்றனா். இந்த மூலிகை கிழங்கு உழவுக் கலப்பை வடிவில் காணப்படுவதால் இதனை கலப்பைக் கிழங்கு என அழைப்பாா்கள். தமிழ்நாட்டில் ஜீன், ஜீலை மாதங்களில் நடுவாா்கள். இந்த மூலிகை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பூக்கும். இதன் பூ பளிச்சென்று ஆரஞ்சு, மஞ்சள் வண்ணப் பூக்களைக் கொண்ட கொடியாகும்.
பயன்கள்
இந்த மூலிகை வாதம், மூட்டுவலி, தொழுநோய் குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய் வெண்குஷ்டம், ஆகியவற்றிக்கும் நல்லதோர் மருந்து. உடலுக்கு சக்தி தரும் டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது.
சுகர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப்பொருட்கள் இதில் கிடைக்கின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள் மற்றும் தேள், பாம்புக்கடிகளுக்கு நல்லதொரு மருந்து. இதன் கிழங்கை 7 வித நஞ்சுபதார்த்தங்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றது. இது பாம்புக்கடி, தேள்கொட்டு, தோல் சம்பந்தமான வற்றிக்குச் சிறந்தது.
உலர்ந்த கிழங்கை தினந்தோரும் புதிய கோமையத்தில் 3 நாள் வரையில் ஊறப்போட்டு மெல்லிய வில்லைகளாக அரித்து உப்பிட்ட மோரில் போட்டு இரவு காலத்தில் ஊறவைப்பதும் பகலில் உலர்த்துவதுமாக 7 நாள் செய்ய அதிலுள்ள நஞ்சு விலகும். பாம்பு கடித்தவா்களுக்கு இதில் ஒரு சிறிய துண்டை மென்று தின்ணும் போது விஷம் கால் அல்லது அரைமணி நேரத்திற்குள் இறங்கும்.
வேறுப்பெயர்கள்
கலப்பைக்கிழங்கு, செங்காந்தள்மலர், வெண்தோன்றிக் கிழங்கு, காா்த்திகைக் கிழங்கு, காந்தள்மலர்ச்செடி, நாபிக்கொடி போன்றவை.
தாவரப்பெயர்
Gloriosa Superba இது Lliaceae என்ற தாவரக்குடும்பத்தைச் சார்ந்தது.