தினம் ஒரு மூலிகை – சர்ப்பகந்தி
சர்ப்பகந்தி
சர்ப்பகந்திக்குச் செம்மண் மற்றும் பொறைமண், அமிலத்தன்மை அதிகம் உள்ள மண் ஏற்றது. காரத்தன்மை அதிகமுள்ள (PH 8) மண்ணில் வளராது. இதற்கு 20 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செலிசியஸ் வெப்ப நிலையும் ஆண்டுக்கு 75 -100 செ.மீ. மழையளவு ஏற்றது. சர்ப்பகந்தி வறட்சியைத் தாங்கும். அதிக குளிரும், அதிக மழையும் சர்ப்பகந்திக்கு ஆகாது. இதன் ஆணிவேர் ஆழமாக நேராகச் செல்லும், சல்லிவேர்கள் கிழையாகப்பிறியும். மூன்று ஆண்டுகளில் முதிர்வடையும். பின் அதை மருந்துக்காகத் தோண்டி எடுப்பார்கள். சுமார் 400 வருடங்களாக இதன் வேரை மூலிகையாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதன் பிறப்பிடம் துணை ஆசியாக் கண்டம். பின் இந்தியா, அந்தமான், தென்கிழக்கு ஆசியா, பங்களாதேஷ், பர்மா, இந்தோனேசியா, மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் பரவி வளர்க்கப்பட்டது. இதன் இனப்பெருக்கம் விதைக் குச்சி, வேர் துண்டுகள் மற்றும் விதை மூலம் செய்யப்படுகிறது. வணிக ரீதியாக விதை மூலம் நாற்றுக்கள் உற்பத்தி செய்து நடுவது நல்லது. ஒரு எக்டருக்கு 8 -10 கிலோ புதிய விதைகள் தேவை. விதைத்த ஆறு வாரத்தில் நாற்றுகள் தயாராகி வடும். 2 அடி பாரில் ஒரு அடி இடைவெளியில் நடவேண்டும். வேர்கள் 15 செ.மீ. பருமனாக இருப்பதனுடன் வேர்களின் வெளித்தோல் பழுப்பு நிறத்திலும், உட்புறம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். ஏராளமான இளஞ்சிவப்பு நிறமுடைய பூங்கொத்துக்களுடன் காய்கள் ஊதா கலந்த கறுப்பு நிறத்துடன் காணப்படும். ஒவ்வொரு காயிலும் 2 – 3 விதைகள் வரை இருக்கும்.
பயன்கள்
சர்ப்பகந்தி பலநரம்பு வியாதிகளும், புற்று நோய், மலேரியா, மனஅழுத்தம், ஹைப்பர் டென்சன், இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்றவற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது.
இலைகளின் சாறு கண்விழி படலத்தின் ஒளிபுகா தன்மையினை போக்க வல்லது. வேரின் கசாயம் பெண்களின் மகபேறு காலத்தில் கர்ப்பப்பையினை சுருங்கி விரியச் செய்யும் தன்மை கொண்டது. குடல் கோளாறுகள் காய்ச்சல் ஆகியவற்றினை போக்கக் கூடியது.
வேரின் ஆல்கலாய்டு சாறு தளர்நெஞ்சுப்பை துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்கம் ஆகியவற்றுடன் மன உளைச்சலைத் தணிக்கும் திறன் கொண்டது. மனவாட்ட நோய், மனநோய், நரம்பு தொடர்பான நோய்கள், முரண் மூளைநோய் ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுகிறது.
சர்பகந்தா செடியின் வேரை உலர்த்தி பொடி செய்து ஒரு கிராம் அளவு எடுத்து சம அளவு நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி மற்றும் தான்றிக்காய் பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
நரம்பு தளர்ச்சி குறைய சமஅளவு சர்பகந்தா செடியின் வேர்பொடி மற்றும் ஜடமாஞ்சி வேர் பொடி இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வர குணமாகும்.
சர்ப்பகந்தா மாத்திரைகளாக இப்போது கிடைக்கின்றன சித்த மருத்துவர் ஆலோசனை படி வாங்கி பயன்படுத்தலாம்.
மூலிகையின் பெயர் -: சர்ப்பகந்தி, ஷர்ப்பகந்தி, சர்ப்பகாந்தி, சர்ப்பகாந்தா, ஷர்ப்பகாந்தா, சர்பகந்தா, ஷர்பகந்தா என்றும் அழைக்கப்படுகிறது.
பயன் தரும் பாகங்கள் -: வேர்கள்
வேறு பெயர்கள் -: சிவன் அமல் பொடி, பாம்புக்களா.
வகைகள் -: ராவுன்பியா செர்பென்டினா. ராவுன்பாயா டெட்ரா பில்லர். ஆர்.எஸ் 1..
தாவரப்பெயர் -: RAUVOLFIA SERPENTINA.
தாவரக் குடும்பம் -:APOCYNACEAE.