தினம் ஒரு மூலிகை – கோவைக்காய்
கோவை
கோவைக் கொடி நன்கு படா்ந்து வளரக் கூடிய கொடி இனத்தைச் சோ்ந்தது. கோவை மருத்துவக் குணங்களோடு சோ்த்து, கண்களைக் கவரும் சில தாவர உறுப்புகளையும் பல காரணங்களுக்காக இயற்கை படைத்திருக்கிறது. அந்த வகையில் “கோவை” எனப்படும் தாவரத்தின் பழம் செக்கச் சிவப்பாக அமைந்திருப்பது கண்களுக்கு விருந்து. சங்க இலக்கியப் புலவா்களுக்கும் சாி, நவீனக் கவிஞா்களுக்கும் சாி உதட்டுக்கும் சிவப்பு நிறத்துக்கும் உவமையாக அதிகம் பயன்படுத்தப்பட்டது கோவைப் பழம் தான். இதன் இலைகளையும் காியையும் ஒன்றாக அரைத்து வகுப்பறையின் கரும்பலகையை மெருகேற்றிய வித்தை முந்தைய தலைமுறை மாணவா்களுக்குச் சொந்தம்.
கோவைக் கொடி நன்கு படா்ந்து வளரக் கூடிய கொடி இனத்தைச் சோ்ந்தது. இது சாதாரணமாக வேலிகளிலும், குத்துச்செடி, மரங்களிலும் படா்ந்து தமிழகமெங்கும் வளரக் கூடியது. இதன் இலைகள் ஐந்து கோணங்களையுடைய மடலான காம்புடையது. மலா்கள் வெள்ளையாகவும், நீண்ட முட்டை வடிவ வாியுள்ள காய்களையும், பழங்கள் செந்நிறமாக இருக்கும். பெண்களின் உதடுகளை இந்தப் பழத்திற்கு ஒப்பிடுவா் புலவா்கள்.
பயன்கள்
இதன் காயைப் பச்சையாகச் சமையலில் சேர்த்தும் வற்றலாக உலரவைத்தும் பயன்படுத்தலாம். காய்களை வெயிலில் உலர வைத்து, எண்ணெயிலிட்டு லேசாகப் பொறித்த வற்றலுக்கு, சளியை வெளியேற்றும் குணம் உண்டு. சுவையின்மைக்கு கோவைக் காய் வற்றல் சிறந்த தொடு உணவு. கோவைக் காயில் செய்யப்படும் ஊறுகாய் நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. கோவைக் கிழங்கை உணவில் சேர்த்து வர, கப நோய்களின் வீரியம் குறையும். கோவைக்காயைக் கொண்டு செய்யப்படும் அவியல், துவையல் போன்றவை பழங்காலம் முதலே பிரசித்தம்
இதன் பழங்களுக்கு இருக்கும் எதிர்-ஆக்ஸிகரணி தன்மை குறித்து ஆய்வுகள் நடைப்பெற்றிருக்கின்றன. குளுக்கோஸ் வளர்சிதை சுழற்சியில் இருக்கக்கூடிய சில நொதிகளைக் கட்டுப்படுத்தி, ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோவைக்காயை துண்டு துண்டாக வெட்டி, வெய்யிலில் நன்கு காயவைத்துப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை சாப்பிட்டால் இரத்த சா்க்கரை நோய் குணமாகும். பச்சைக் காயை வாரம் இருமுறை பொறியல் செய்தும் சாப்பிடலாம்.
கோழையகற்றி, இசிவகற்றி, வியர்வைப் பெருக்கி போன்ற செய்கைகளை உடையது கோவை. ‘கொவ்வை சிவப்புக் கொடியின்… மூலமிவை செம்பு’ எனும் தேரையர் அந்தாதி பாடல், செம்புச் சத்து நிறைந்த மூலிகைகளைப் பட்டியலிடுகிறது. அதில் ‘கோவை’ இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டு மருந்தாக: வியர்வை வெளியேறாமல் அவதிப்படுபவர்கள், இதன் இலைச் சாற்றை உடலில் பூசலாம். வேனிற் காலத்தில் உடலில் கொப்புளங்கள் உருவாகும்போது, நுங்குச் சாற்றுடன் கோவை இலைச் சாற்றையும் அரைத்து உடல் முழுவதும் தடவலாம். இதன் இலையை குடிநீரிலிட்டோ இலையை உலர வைத்துப் பொடி செய்தோ சிறிதளவு தண்ணீரில் கலந்து வழங்க, கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். சிறுநீர் அடைப்பு குணமாகும். கோவைக்காயை வாயிலிட்டு நன்றாக மென்று பின் துப்ப, நாக்கு – உதடுகளில் உண்டாகும் புண்கள் குணமாகும். சிறுநீர் எரிச்சலை குணமாக்க, கோவைக் கொடியை இடித்துச் சாறெடுத்து, வெள்ளரி விதைகள் கலந்து கொடுப்பது சில கிராமங்களில் முதலுதவி மருந்து. இதன் இலைச் சாற்றை வெண்ணெயோடு சேர்த்தரைத்து சொறி, சிரங்குகளுக்குப் பூசும் உத்தியை காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் பின்பற்றுகின்றனர்.
கோவைக்காய் உள்ள சத்துக்கள்
- வைட்டமின் ஏ
- கால்சியம்
- பாஸ்பரஸ்
- போலிக் ஆசிட்
- அயன்
மேற்கண்ட சத்துகள் அதிகம் நிறைந்துள்ளதால் நமக்கு நிறைய நன்மைகளை கிடைக்கிறது.
கோவைக்காயின் வகைகள்
1. மூவிரல் கோவை
2. ஐவிரல் கோவை
3.நாம கோவை
4.கருங்கோவை
இதனை தொண்டை கொடி என அழைக்கின்றனர். அதில் இரு வகை கோவை உள்ளது.
- அப்பை கோவை
- இராம கோவை
பயன் தரும் பாகங்கள்
இலை, காய், தண்டு, வோ் மற்றும் கிழங்கு
வேறு பெயா்
கொவ்வை
தாவரப் பெயா்
Coccinia indica இது Cucurbitaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சாா்ந்தது.