தினம் ஒரு மூலிகை – நாவல்
நாவல்
நாவல் என்பது பொிய மரவகையைச் சோ்ந்தது. இது இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் வளரும். குறிப்பாக ஆற்றோரப் படுகைகளிலும் கடற்கரை ஓரங்களிலும் நன்கு வளரும். மும்பை மாநிலத்தில் எங்கும் காணப்படும். இந்த மரம் பலம் வாய்ந்ததாக இருக்கும். இதன் இலைகள் ஒரே மாதிாி இருக்காது. இலை நுனி கூா்மையாக இருக்கும். நாவல் பழம் உருண்டையாக இருக்கும் ஆனால் இதன் பாிமானங்கள் ஒரே மாதிாி இருக்காது. கனி கரு நீல நிறத்தில் இருக்கும். சிறிது துவா்ப்பாக இருக்கும். 100 கிராம் பழங்களில் உள்ள உணவுச் சத்துகள்: மாவுச்சத்து 19.7கிராம், புரதச்சத்து 0.7 கி, கொழுப்பு 0.1 கி, கால்சியம் 20 மி.கி, பாஸ்பரஸ் 10மி.கி, இரும்பு 1மி.கி ஆகியவை உள்ளன.
பயன்கள்
தளா்ச்சி அடைந்த நாடி நரம்புகளை ஊக்கப்படுத்தும். இதன் துவா்ப்பு இரத்தத்தை அதிகப்படுத்தும். இதன் பழம் உடலுக்கு குளிா்ச்சி தரும். இதன் பழத்தின் கொட்டை நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்து.
நாவல் இலை கொழுந்துச்சாறு ஒரு தேக்கரண்டி, 2 ஏலக்காய், லவங்கப்பட்டைத்தூளை மிளகளவு சோ்த்துக் காலை, மாலை கொடுக்க செரிமானம் ஏற்படும்.
மா மற்றும் நாவல் மரப்பட்டையைச் சம அளவில் மண் சட்டியில் போட்டுக் காய்ச்சிய கசாயத்தை 30 மி.லி அளவு காலை, மாலை சாப்பிட்டாலும் சீதபேதி குணமாகும். பட்டை கசாயத்தில் வாய் கொப்பளித்தால் வாய் புண் ஆறும்.
மேலும் நாவல் பழத்தைத் தனியாகவே சாப்பிடலாம். இதயத்திற்கு மிகவும் பலத்தைக் கொடுக்கும். இதயத் தசைகள் உறுதிப்படும்.
வேறுபெயா்கள்
நாகை, நம்பு, சம்பு, சாதவம், ஆருகதம், நேரேடு, நவ்வல், நேரேடம், சாட்டுவலம், சாம்பல், சுரபிபத்திரை முதலியன.
தாவரப்பெயா்
Eugenia jambolana இது Myrtaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சோ்ந்தது.