தினம் ஒரு மூலிகை – எலுமிச்சை
எலுமிச்சை
எலுமிச்சையை அரச கனி என்பர். இதன் பயன்பாடு கருதியும் மஞ்சள் நிற மங்களம் குறித்தும் இதற்கு இப்பெயா் வைத்தனா். கடவுளுக்கு மிக உகந்தது. எலுமிச்சையின் தாயகம் தென்கிழக்கு ஆசியா ஆகும். இது இமயமலை அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடா்ச்சி மலை வரை காணப்படும். எலுமிச்சை முள்ளுள்ள சிறு மர வகைகளைச் சாா்ந்தது. சுமார் 15 அடி வரை வளரும். தமிழகம் முழுவதும் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இது செம்மண்ணில் நன்கு வளரும். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
பயன்கள்
எலுமிச்சையின் பொதுகுணமாக பித்தம் போக்கவும், சித்தம் ஆக்கவும், அறிவை வளர்க்கவும் உதவுகிறது. வாந்தி, விக்கல், வயிற்றோட்டம் போன்றவை குணப்படுத்தும். பைத்தியம் தெளிவிக்கும். சித்த மருந்துகளில் துணை மருந்தாகப் பயன்படும். அது மட்டுமல்லாமல் பிற மருந்துகள் கெடாமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். எலுமிச்சை சாறு கொண்டு டீ போட்டால் அதற்கு தனி சுவை உண்டு.
எலுமிச்சை பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் அரை லிட்டர், நல்லெண்ணை ஒன்றரை லிட்டா் சோ்த்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்கு (6 மாதம்) தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.
இதன் இலையை புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டு வர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும்.
குடற்புண், காய்ச்சல், சுரம் போன்றவைக்கு எலுமிச்சம் பழச்சாற்றில் பாலைக் கலந்தால் அது திரிந்து நீர்த்து விடும். இதனை வடிகட்டிக் கொடுக்கலாம். பிற மருந்தான ஊசி போட்டாலும் இதனை துணை மருந்தாகக் கொடுக்கலாம். மேலும் தற்போது பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கும் எலுமிச்சை ஒரு அருமருந்தாகும்.
தாவரப்பெயா்
Citrus medica இது Rutaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சோ்ந்தது.